No results found

    தொடர் மழை காரணமாக கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த சில நாட்களாகவே திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகப்படியான வெயில் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் வராமல் தவித்து வந்தனர். இந்நிலை யில் கடந்த சில தினங்க ளாக திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஜமுனாமரத்தூர் போளூர் கலசப்பாக்கம் கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ந்தன. இதில் அதிகபட்சமாக கலசபாக்கம் பகுதியில் 66 செ.மீ மழை பதிவாகியுள்ளன. மேலும் நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக ப்படியான கலசப்பாக்கம் ஜமுனாமுத்தூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்ததால் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள நாக நதி ஆறு மற்றும் ஆரணியில் உள்ள கமண்டல நாகநதி ஆகிய 2 ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பருவ மழை காலங்களில் மட்டுமே ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கமாக ஒன்று ஆனால் தற்போது கோடை காலங்களில் இது போன்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வரும் நிலையில் இந்த கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال