அதனைத் தொடர்ந்து தற்பொழுது ராமநாதபுரம் மாவட்டமக்களின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றித் தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முன்வைத்த கோரிக்கை களை ஏற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் கரூர் மாவட்டம், நஞ்சை புகளூர் காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து ரூ.2 ஆயிரத்து 400 கோடியில் தனித்திட்டமாக பைப் லைன் பொருத்தப்பட்டு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் குடி தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் தொடங்க உள்ளன. மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 110 சாலைப்பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் அவ்வப்போது அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
உங்களின் தேவைகளை எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் நிறைவேற்றி தர தயாராக உள்ளோம். முதல்-அமைச்சர் தெரி விப்பது போல் மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். மக்களுக்காக நம் முதல்வர் செயல்பட்டு வருகிறார். அனைவரும் ஒன்று கூடி முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், வருவாய் கோட்டாட்சியர் கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்) மாரிசெல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.