நேற்று காலையில் ஊராட்சி மன்ற பணிகளை செய்ய வருகை தந்த ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் புதியதாக போட்டிருந்த பூட்டை கண்டு அதிர்ச்சியடைந்து வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி, கடத்தூர் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் குமார் ஆகியோர் வருகை தந்து பூட்டு போட்ட பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த கடத்தூர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சில நாட்களில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றி தருவதாக அதிகாரி முன்னிலையில் தலைவர் அளித்த உறுதியின் பேரில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கதவை அதிகாரிகள் திறந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ப்படாமல் உள்ளது என பல பகுதிகளிலும் பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.