No results found

    அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


    மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மத்திய அரசு வழங்கியது போல நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி, திருமங்கலம் தாசில்தார் அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Previous Next

    نموذج الاتصال