No results found

    மருத்துவம் படிக்க ஆசைப்படுபவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்- கவர்னர் பேச்சு


    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை இன்று கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். இந்நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் இன்று நடந்தது. இதில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா உள்ளிட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மேலும் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உயர்கல்வி படிப்புகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். உங்களின் இலக்கு முதன்மையாக இருக்க வேண்டும். என்ன இலக்கை அடைய வேண்டும் என்பதில் மாணவர்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்னும் பெரும் பயணம் செல்ல வேண்டி இருக்கிறது. மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال