No results found

    டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மாணவர்களுக்கு பாராட்டு


    கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்புகள் நடந்தன. இதில், கலந்து கொண்ட மாணவர்களில் அருண்குமார், செந்தில்ராஜன், ராஜராஜேஸ்வர் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் முதல்நிலை 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சப்-கலெக்டர் சைபுதீன், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    Previous Next

    نموذج الاتصال